தொழில்நுட்பச் செய்திகள்
இனிமே பயன்படுத்தாதீங்க...மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விடுத்த வேண்டுகோள்
தற்போது மைக்ரோசாஃப்டால் வழங்கப்பட்டு வரும் இந்த சேவை வரும் ஜுன் மாதம் முதல் நிறுத்தப்படவுள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம், விண்டோஸ் பயனர்களை இண்டர்நெட் எக்ஸ்பிளோரர் பிரவுசரை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இண்டர்நெட் எக்ஸ்பிளோரர் 11 சேவையை முழுதாக ஜூன் 15, 2022 முதல் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது விண்டோஸ் பயனர்கள் யாரும் எக்ஸ்பிளோரர் பிரவுசரை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்பிளோரருக்கு வழங்கப்பட்டு வந்த சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படும். அதன்பின் விண்டோஸ் பிரவுசராக மைக்ரோசாஃப்ட் எட்ஜ் இருக்கும். எக்ஸ்பிளோரர் பயன்படுத்துபவர்களுக்கு தானாகவே மைக்ரோசாஃப்ட் எட்ஜுக்கு ரீடைரெக்ட் செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.
நவீன தேவைகளுக்கு ஏற்ப ஒரே ஒரு பிரவுசரிலேயே அனைத்து அம்சங்களையும் கொண்டு வர மைக்ரோசாஃப்ட் திட்டமிட்டுள்ளதால் எக்ஸ்பிளோரருக்கு பதில், எட்ஜை பிரதான பிரவுசராக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.