தொழில்நுட்பச் செய்திகள்
பி.எஸ்.என்.எல்

திடீரென ரீசார்ஜ் விலையை குறைத்த பி.எஸ்.என்.எல்- இந்த தள்ளுபடியை பெறுவது எப்படி?

Published On 2022-02-28 07:06 GMT   |   Update On 2022-02-28 07:06 GMT
இந்த விலை குறைப்பு மார்ச் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என பி.எஸ்.என்.எல் தெரிவித்துள்ளது.
பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது ரீசார்ஜ் திட்டங்களுக்கு விலை குறைப்பை அறிவித்துள்ளது. இதன்படி பி.எஸ்.என்.எல்லின் ‘செல்ஃப் கேர்’ செயலி மூலம் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 4 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்த தள்ளுபடி மார்ச் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும்.

இதுமட்டுமின்றி இந்த தள்ளுபடி ரூ.201 அல்லது அதற்கும் மேல் கட்டணம் உள்ள ரீசார்ஜ் திட்டங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். செல்ஃப் கேர் செயலியை பயன்படுத்தினால் மட்டுமே இந்த தள்ளுபடி வழங்கப்படும். 

கூகுள் பே, போன் பே உள்ளிட்ட பிற செயலிகள் மூலம் ரீசார்ஜ் செய்தால் தள்ளுபடி கிடையாது எனவும் பி.எஸ்.என்.எல் கூறியுள்ளது.
Tags:    

Similar News