தொழில்நுட்பச் செய்திகள்
ஆப்பிள்

புதிய உச்சம் தொட்ட ஆப்பிள் சந்தை மதிப்பு

Published On 2022-01-04 10:12 GMT   |   Update On 2022-01-04 10:12 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு உலகளவில் புதிய உச்சத்தை தொட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.


ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3 டிரிலியன் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 2,23,75,950 கோடி வரை உயர்ந்தது. இத்தகைய மதிப்பை எட்டிய முதல் நிறுவனமாக ஆப்பிள் இருக்கிறது. 

ஆப்பிள் நிறுவனம் ஆட்டோமேடெட் கார் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற சந்தைகளில் களமிறங்க இருப்பதும், தொடர்ந்து தலைசிறந்த சாதனங்களை அறிமுகம் செய்யும் என்பதாலும் ஆப்பிள் பங்குகள் விலை கணிசமாக அதிகரித்தது.



2022 ஆண்டின் முதல் வர்த்தக நாளில் ஆப்பிள் நிறுவன பங்கு ஒன்றின் விலை இந்திய மதிப்பில் ரூ. 13,640 ஆக துவங்கியது. இதன் மூலம் ஆப்பிள் நிறுவன சந்தை மதிப்பு 3 டிரிலியன் டாலர்கள் வரை அதிகரித்தது. பங்குச்சந்தை நிறைவின் போது ஆப்பிள் நிறுவன பங்கு ஒன்றின் விலை இந்திய மதிப்பில் ரூ. 13,570 என இருந்தது.
Tags:    

Similar News