தொழில்நுட்பச் செய்திகள்
ரிலையன்ஸ் ஜியோ

ரூ. 119 விலையில் புது சலுகை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ

Published On 2021-12-14 05:03 GMT   |   Update On 2021-12-14 05:03 GMT
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 119 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது.


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ரூ. 119 சலுகை பலன்களை சத்தமின்றி மாற்றியமைத்து இருக்கிறது. இந்த சலுகையில் தற்போது தினமும் 300 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். இத்துடன் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் போன்ற பலன்களும் வழங்கப்படுகிறது. 

முன்னதாக 28 நாட்களுக்கு 300 எஸ்.எம்.எஸ். வழங்கி வந்த ரூ. 98 சலுகை கடந்த ஆண்டு மே மாதம் நிறுத்தப்பட்டு இந்த ஆண்டு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. இத்துடன் வேலிடிட்டியும் 14 நாட்கள் என மாற்றப்பட்டு, 300 எஸ்.எம்.எஸ். பலன் மட்டும் நீக்கப்பட்டது.



ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி அந்நிறுவனம் ஏற்கனவே வழங்கிவந்த ரூ. 98 சலுகை விலை தான் ஜியோ ரூ. 119 என மாற்றப்பட்டது. விலை உயர்வு டிசம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வந்தது. ரூ. 119 சலுகையில் ஜியோ செயலிகளுக்கான சந்தாவும் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News