தொழில்நுட்பம்
தென் கொரிய நிறுவனம் உருவாக்கி வரும் பப்ஜி மொபைல் 2 கேம் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பப்ஜி மொபைல் 2 கேம் அடுத்த வாரம் வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சீன நிறுவனம் என்பதால், இந்தியாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் பப்ஜி மொபைல் தடை செய்யப்பட்டது. தற்சமயம் பப்ஜி மொபைல் 2 கேம் தென் கொரியாவை சேர்ந்த கிராப்டான் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வருகிறது.
இதுவரை பப்ஜி மொபைல் 2 வெளியீடு பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இதன் வெளியீடு மட்டுமின்றி இந்த கேம் கதைக்களம் 2051 ஆண்டு நடைபெறுவதை போன்று இருக்கும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. மேலும் இதில் பல்வேறு அதிநவீன ஆயுதங்கள், கேட்ஜெட்கள் மற்றும் புதிய மேப் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது.
முந்தைய கேம் போன்றே புதிய பப்ஜி மொபைல் 2 வெர்ஷனும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் நடைபெற இருக்கும் பப்ஜி குளோபல் இன்விடேஷனல் எஸ் 2021 நிகழ்வில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.