தொழில்நுட்பம்
ட்விட்டர்

நூற்றுக்கணக்கான அக்கவுண்ட்களை நீக்கிய ட்விட்டர் - காரணம் இது தான்

Published On 2021-02-24 06:07 GMT   |   Update On 2021-02-24 06:09 GMT
சமூக வலைதள நிறுவனமான ட்விட்டர் நூற்றுக்கணக்கான அக்கவுண்ட்களை நீக்கியிருக்கிறது. இதற்கான காரணம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


ட்விட்டர் நிறுவனம் 337 அக்கவுண்ட்களை நீக்கி இருப்பதாக அறிவித்து உள்ளது. இந்த அக்கவுண்ட்கள் அர்மீனியா, ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் தொடர்பு கொண்டிருந்ததாக ட்விட்டர் தெரிவித்து இருக்கிறது. 238 அக்கவுண்ட்கள் ஈரானில் இருந்து செயல்பட்டதாகவும், இவை அந்நிறுவன வழிமுறைகளை மீறியதாகவும் தெரிவித்து உள்ளது.

100 அக்கவுண்ட்கள் ரஷ்யாவுடன் தொடர்பு கொண்டிருந்ததாக ட்விட்டர் தெரிவித்தது. இவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனை குறிவைத்து செயல்படுவதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது. அர்மீனியாவுடன் தொடர்பு கொண்டிருந்ததாக 35 அக்கவுண்ட்களும் நீக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் தெரிவித்து இருக்கிறது.

337 அக்கவுண்ட்களும் விதிகளை மீறியதாக கூறி ட்விட்டரில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக அந்நிறுவன வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறது. 
Tags:    

Similar News