தொழில்நுட்பம்
சிக்னல்

பல்வேறு சிக்கல்களுடன் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது சிக்னல் ஆப்

Published On 2021-01-18 11:15 IST   |   Update On 2021-01-18 15:20:00 IST
அதிக பயனர்களால் நீண்ட நேரம் முடங்கியிருந்த சிக்னல் ஆப் பல்வேறு சிக்கல்களுடன் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.


சிக்னல் செயலி பல மணி இடையூறுக்கு பின் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. வாட்ஸ்அப் செயலியின் புது அறிவிப்பு காரணமாக பல லட்சம் பயனர்கள் திடீரென சிக்னல் செயலிக்கு மாறியதால் தொழில்நுட்ப குறைபாடு ஏற்பட்டதாக சிக்னல் தெரிவித்தது.

வாட்ஸ்அப் தனது பயனர் விவரங்களை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமுடன் பகிர்ந்து கொள்வதாக அறிவித்ததை தொடர்ந்து சிக்னல் செயலி அதிக டவுன்லோட்களை பெற்றது. 

தற்சமயம் இடையூறுக்கு பின் செயலி மீண்டும் செயல்பட துவங்கி இருந்தாலும், பலர் சேவை சீராக இயங்கவில்லை என தெரிவித்து வருகின்றனர். இதற்கு பதில் அளித்த சிக்னல், அடுத்த அப்டேட்டில் குறைகள் சரி செய்யப்படும் என தெரிவித்து இருக்கிறது.

Similar News