தொழில்நுட்பம்
ஆப்பிள் வாட்ச்

ஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடலில் புதிய பிரச்சனை

Published On 2020-10-22 05:39 GMT   |   Update On 2020-10-22 05:39 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடலில் பிரச்சனை ஏற்படுவதாக பயனர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஆப்பிள் நிறுவனம் தனது குறைந்தவிலை ஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடலை செப்டம்பர் மாத நிகழ்வில் அறிமுகம் செய்தது. புதிய ஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடல் தற்சமயம் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. 

இந்நிலையில், புதிய வாட்ச் எஸ்இ மாடலில் பிரச்சனை ஏற்படுவதாக பயனர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடல் அதிக சூடாகிறது என பயனர்கள் ரெடிட் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 



இவ்வாறு ஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடலில் கோளாறு தெரிவித்தவர்களில் ஆறில் மூன்று பேருக்கு ஆப்பிள் வாட்ச் மாடலுக்கான பணம் திரும்ப வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. 

வாட்ச் எஸ்இ சார்ஜ் செய்யும் போது அதிக சூடானது என சிலர் தெரிவித்தனர். மேலும் சிலர் கையில் அணிந்திருக்கும் போதே வாட்ச் அதிக சூடானது என தெரிவித்தனர். இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இது தென் கொரிய சந்தையில் உற்பத்தி செய்யப்பட்ட யூனிட்களில் மட்டும் இந்த பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் எஸ்இ வாங்கியவர்கள் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இந்திய சந்தையில் புதிய ஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடல் விலை ரூ. 29,990 முதல் துவங்குகிறது. 

Tags:    

Similar News