தொழில்நுட்பம்
ப்ளிப்கார்ட்

ஸ்மார்ட்போன்களுக்கு வாரண்டி வழங்கும் ப்ளிப்கார்ட் சேவை

Published On 2020-06-16 11:23 GMT   |   Update On 2020-06-16 11:23 GMT
ப்ளிப்கார்ட் தளத்தில் மொபைல் போன் வாங்குவோருக்கு வாரண்டி வழங்கும் புதிய சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.



ப்ளிப்கார்ட் நிறுவனம் தனது வலைதளத்தில் மொபைல் போன் வாங்குவோருக்கு புதிய வாரண்டி அசிஸ்டண்ட் சேவையை அறிவித்து இருக்கிறது. ப்ளிப்கார்ட் வாரண்டி அசிஸ்ட் சேவையின் கீழ் வாடிக்கையாளர்கள் மொபைல் போன்களில் உள்ள உற்பத்தி குறைபாடுகள், மென்பொருள் மற்றும் வன்பொருள் கோளாறுகளை வாரண்டியின் கீழ் சரி செய்து கொள்ள முடியும்.

ப்ளிப்கார்ட தளத்தில் புதிய மொபைல் போன் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த சலுகையை பெற முடியும். இந்த சலுகையில் பிராண்டுகள் அறிவிக்கும் வாரண்டியின் கீழ் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் வழங்கப்படுகிறது. ப்ளிப்கார்ட் வாரண்டி அசிஸ்டண்ட் சேவைரூ. 99 விலையில் வழங்கப்படுகிறது.



வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பெற மொபைல் போன் வாங்கும் போதே, ப்ளிப்கார்ட் தளத்தில் தேர்வு செய்ய வேண்டும். சேவையில் ப்ளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் வீட்டிற்கு வந்து மொபைல்களை பெற்று அதனை சரிசெய்து வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும்.

வாடிக்கையாளர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் வேளையில், வாடிக்கையாளர்களுக்கு உதவும் நோக்கில் அவர்களது போன்களை அவர்கள் வீட்டை விட்டு வெளியேற விடாமல் சரி செய்து தருகிறோம் என ப்ளிப்கார்ட் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.
Tags:    

Similar News