தொழில்நுட்பம்
ரிலையன்ஸ் ஜியோ சலுகைகளில் முன்பை விட நான்கு மடங்கு பலன்கள் அறிவிப்பு
ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சலுகைகளில் முன்பை விட நான்கு மடங்கு அதிக பலன்கள் வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பிரீபெயிட் பயனர்களுக்கு நான்கு மடங்கு பலன்களை வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் பயனர்கள் ரிலையன்ஸ் டிஜிட்டல், டிரெண்ட்ஸ் ஃபுட்வியர் மற்றும் ஏஜியோ தளங்களில் பயன்படுத்துவதற்கான தள்ளுபடி வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன.
ஜியோ அறிவித்திருக்கும் நான்கு மடங்கு பலன்கள் ஜியோ ரூ. 249 விலையில் துவங்கி அதற்கும் அதிக விலை சலுகைகளில் வழங்கப்படுகிறது. வவுச்சர்கள் ரீசார்ஜ் தொகைக்கு இணையான மதிப்புக்கு வழங்கப்படுகிறது. ரீசார்ஜ் நிறைவுற்றதும் வவுச்சர்கள் மைஜியோ செயலியின் கூப்பன்ஸ் பகுதியில் சேர்க்கப்படுகிறது.
ரீசார்ஜ் செய்யும் போது வழங்கப்படும் தள்ளுபடி வவுச்சர்களை மேலே குறிப்பிடப்பட்டு உள்ள ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் அடுத்த முறை பொருட்களை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த வவுச்சர்களின் அதிகபட்ச மதிப்பு ரூ. 300 ஆகும். இதனை பயன்படுத்த பயனர்கள் ஏஜியோ, டிரெண்ட்ஸ், டிரெண்ட்ஸ் ஃபுட்வியர் போன்ற தளங்களில் குறைந்தபட்சம் ரூ. 999 விலைக்கு பொருட்களை வாங்க வேண்டும். ரிலையன்ஸ் டிஜிட்டல் சேவையில் குறைந்த பட்சம் ரூ. 10 ஆயிரத்துக்கு பொருட்களை வாங்க வேண்டும்.
ஜியோ புதிய சலுகையில் பயன்பெற வாடிக்கையாளர்கள் ஜூன் 1 ஆம் தேதி துவங்கி ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இது ஜியோ புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் பழைய வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது.