தொழில்நுட்பம்
ஆப்பிள்

ஐ.ஒ.எஸ். தளத்தில் புதிய பாதுகாப்பு குறைபாடு

Published On 2020-02-26 06:07 GMT   |   Update On 2020-02-26 06:07 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஒ.எஸ். இயங்குதளத்தில் புதிதாக பாதுகாப்பு குறைபாட்டினை பாதுகாப்பு வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.



டேட்டா பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை பாதுகாப்பதில் பெயர்பெற்ற நிறுவனமாக ஆப்பிள் இருக்கிறது. தொழில்நுட்ப சந்தையில் மற்ற இயங்குதளங்களுடன் ஒப்பிடும் போது, ஐ.ஒ.எஸ். அதிக பாதுகாப்பானதாக விளங்குகிறது.

இந்நிலையில், ஐ.ஒ.எஸ். தளத்தில் புதிதாக பாதுகாப்பு குறைபாடு ஒன்றை கண்டறிந்து இருப்பதாக இரண்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது ஆப்பிள் ஐபேட் மற்றும் ஐபோன் சாதனங்களில் உள்ள தகவல்களை இடைமறிக்க முடியும் என தெரிவித்து இருக்கின்றனர்.



இது குறித்து பாதுகாப்பு வல்லுநர்களான டலால் ஹஜ் பக்ரி மற்றும் டாமி மிஸ்க் கூறும் போது, ‘பயனர் தங்களின் தனிப்பட்ட தகவல்களை காப்பி செய்யும் போது, அது ஆப்பிள் நிறுவனத்தின் பொதுவான பேஸ்ட்போர்டில் சேமிக்கப்படுகிறது. இந்த தகவலினை அனைத்து செயலிகளாலும் பயன்படுத்த முடியும். இதன் மூலம் பயனரின் விவரங்கள் அம்பலமாகும் அபாயம் அதிகம்’ என தெரிவித்துள்ளனர்.

ஐ.ஒ.எஸ். மற்றும் ஐபேட் இயங்குதள செயலிகளுக்கு பேஸ்ட்போர்ட் தளத்தை இயக்க வரம்பற்ற அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் அவர்களை அறியாமலேயே தங்களது விவரங்களை வெளியிடும் சூழல் நிலவுகிறது. இது எப்படி சாத்தியமாகும் என்பதை பாதுகாப்பு வல்லுநர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் விளக்கி இருக்கின்றனர்.

இத்துடன், ஆப்பிள் நிறுவனம் பயனர் அனுமதியின்றி, பேஸ்ட்போர்டு தளத்தை மற்றவர்கள் இயக்கும் வசதி நீக்கப்பட வேண்டும். பயனர் காப்பி செய்யும் தரவுகளை பேஸ்ட் செய்யும் போது சம்மந்தப்பட்ட செயலிக்கு மட்டுமே பேஸ்ட்போர்டு இயக்குவதற்கான அனுமதி வழங்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News