தொழில்நுட்பம்
ரியல்மி

விரைவில் ஸ்மார்ட் டி.வி அறிமுகம் செய்யும் ரியல்மி

Published On 2020-02-22 06:15 GMT   |   Update On 2020-02-22 06:15 GMT
ரியல்மி பிராண்டு விரைவில் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அந்நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்திருக்கிறார்.



ரியல்மி தலைமை செயல் அதிகாரி ஃபிரான்சிஸ் வாங் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் புதிய ரியல்மி பிராண்டு ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருந்தார். எனினும், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவினை ஜி.எஸ்.எம்.ஏ. ரத்து செய்தது.

இந்நிலையில், ரியல்மி பிராண்டு ஆன்லைனில் விழாவை நடத்துகிறது. வரும் மாதங்களில் ரியல்மி பிராண்டு பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்திருக்கிறார். இவற்றுடன் ஸ்மார்ட் டி.வி. மாடல்களை ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.



முன்னதாக ரியல்மி லிண்க் எனும் செயலியை ரியல்மி பிராண்டு அறிமுகம் செய்தது. இந்த செயலி ரியல்மி ஐ.ஒ.டி. சாதனங்களை இயக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ரியல்மி பிராண்டு விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் ரியல்மி பேண்ட் பற்றிய விவரங்களையும் மாதவ் சேத் தெரிவித்திருக்கிறார்.

அதன்படி இதய துடிப்பு சென்சார் கொண்ட குறைந்த விலை ஃபிட்னஸ் பேண்ட் சாதனங்களில் ஒன்றாக ரியல்மி பேண்ட் இருக்கும் என அவர் தெரிவித்தார். இதில் கலர் AMOLED ஸ்கிரீன், பில்ட்-இன் சார்ஜிங் போர்ட், மூன்று நிறங்களில் ஸ்டிராப்கள் வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.
Tags:    

Similar News