தொழில்நுட்பம்
ஏர்டெல்

ரூ. 179 விலையில் ஏர்டெல் புதிய சலுகை அறிவிப்பு

Published On 2020-01-20 11:12 IST   |   Update On 2020-01-20 11:12:00 IST
ஏர்டெல் நிறுவனத்தின் புதிய பிரீபெயிட் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள காப்பீடு வழங்கப்படுகிறது.



ஏர்டெல் நிறுவனம் ரூ. 179 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. இச்சலுகையில் வழக்கமான அன்லிமிட்டெட் பலன்களுடன், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பாரதி ஆக்சா உயிர் காப்பீடு திட்டமும் சேர்த்து வழங்கப்படுகிறது. 



இத்துடன் புதிய சலுகையில் அனைத்து நெட்வொர்க் எண்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 2 ஜி.பி. டேட்டா, 300 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. மேலும் ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஆப் பிரீமியம் சந்தா, விண்க் மியூசிக் பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.

ஏற்கனவே இதேபோன்ற பலன்கள் நிறைந்த சலுகையினை ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 149 விலையில் வழங்கி வருகிறது. எனினும், இந்த சலுகையில் உயிர் காப்பீடு வழங்கப்படவில்லை.

Similar News