அறிந்து கொள்ளுங்கள்

4ஜி டு 5ஜி அப்கிரேடு செய்ய லின்க் வந்திருக்கா? உடனே இதை செய்யுங்க!

Published On 2022-10-13 07:01 GMT   |   Update On 2022-10-13 07:01 GMT
  • இந்தியாவில் மெல்ல 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் 5ஜி-யை வெளியிடும் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.

இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 1 ஆம் தேதி துவங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து நாடு முழுக்க 5ஜி சேவையை வெளியிடும் பணிகள் மெல்ல நடைபெற்று வருகின்றன. அடுத்த தலைமுறை மொபைல் நெட்வொர்க் பல்வேறு வழிகளில் பலன் தரும். இதோடு ஹேக்கர்களுக்கும் மக்களை ஏமாற்ற வழி செய்துள்ளது. 5ஜி சேவையை துவங்கும் ஆரம்பக்கட்டத்தில் மக்கள் எப்படி 5ஜி சேவையை ஆக்டிவேட் செய்வது என ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள ஹேக்கர்கள் மும்முரம் காட்ட துவங்கி விட்டனர். அதன் படி 5ஜி சேவையை எப்படி ஆக்டிவேட் செய்ய வேண்டும் என்ற விவரங்களை வழங்குவதாக கூறி மக்களிடம் இருந்து தகவல்களை ஹேக்கர்கள் திருட முயன்று வருகின்றனர். இது குறித்த எச்சரிக்கை தகவலை மும்மை காவல் துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் வெளியிட்டு உள்ளது.

அதில் எப்படி 4ஜி-யில் இருந்து 5ஜி நெட்வொர்க்கிற்கு அப்டேட் செய்ய வேண்டும் என்ற வழிமுறைகள் வழங்குவதாக கூறி பயனர் வங்கி விவரம் உள்பட முக்கிய தகவல்களை ஹேக்கர்கள் சேகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் 5ஜி ஆக்டிவேட் செய்வது பற்றி வரும் சந்தேகத்திற்குரிய இணைய முகவரிகளை க்ளிக் செய்ய வேண்டாம் என்றும் மும்பை காவல் துறை தெரிவித்து உள்ளது.

ஹேக்கர்கள் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர் போன்று தொடர்பு கொண்டு பயனர் விவரங்களை இணைய முகவரி கொடுத்து அபகரிக்கின்றனர். முன்னதாக இதே போன்ற எச்சரிக்கை தகவலை ஐதராபாத் நகர காவல் துறை சார்பிலும் வெளியிடப்பட்டு இருந்தது. அந்த வகையில் 4ஜி-யில் இருந்து 5ஜி நெட்வொர்க்கிற்கு மாறுவோர் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியமாகி இருக்கிறது.

Tags:    

Similar News