வழிபாடு

Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 22 செப்டம்பர் 2025: நவராத்திரி பூஜை ஆரம்பம்

Published On 2025-09-22 07:00 IST   |   Update On 2025-09-22 07:00:00 IST
  • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
  • திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு புரட்டாசி-6 (திங்கட்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : பிரதமை பின்னிரவு 2.49 மணி வரை பிறகு துவிதியை

நட்சத்திரம் : உத்திரம் நண்பகல் 12.25 மணி வரை பிறகு அஸ்தம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

இன்று நவராத்திரி பூஜை ஆரம்பம், சிவன் கோவில்களில் சோமவார பூஜை

இன்று தவுஹத்ர பிரதமை. நவராத்திரி பூஜை ஆரம்பம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை. சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் மகா அபிஷேகக் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.

திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-பக்தி

ரிஷபம்-ஓய்வு

மிதுனம்-பணிவு

கடகம்-சிந்தனை

சிம்மம்-உறுதி

கன்னி-முயற்சி

துலாம்- ஊக்கம்

விருச்சிகம்-நன்மை

தனுசு- பாசம்

மகரம்-விருத்தி

கும்பம்-தெளிவு

மீனம்-லாபம்

Tags:    

Similar News