வழிபாடு

Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 21 செப்டம்பர் 2025: மகாளய அமாவாசை

Published On 2025-09-21 07:00 IST   |   Update On 2025-09-21 07:01:00 IST
  • திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
  • ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு.

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு புரட்டாசி-5 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : அமாவாசை நள்ளிரவு 1.42 மணி வரை பிறகு பிரதமை

நட்சத்திரம் : பூரம் காலை 10.56 மணி வரை பிறகு உத்திரம்

யோகம் : சித்த, அமிர்தயோகம்

ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

இன்று மகாளய அமாவாசை, கோவில்களில் தர்ப்பணம் செய்வது நன்று, திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்

இன்று சர்வ மகாளய அமாவாசை. (ராமேசுவரம், வேதாரண்யம், திலகைப்பதி, திருவெண்காடு, திருவள்ளூர் கோவில்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது நன்று) திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜப் பெருமாள் ஸ்ரீ விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-அமைதி

ரிஷபம்-நட்பு

மிதுனம்-நம்பிக்கை

கடகம்-நன்மை

சிம்மம்-வெற்றி

கன்னி-ஆதாயம்

துலாம்- பக்தி

விருச்சிகம்-பாசம்

தனுசு- நற்செய்தி

மகரம்-ஓய்வு

கும்பம்-வெற்றி

மீனம்-சிறப்பு

Tags:    

Similar News