வழிபாடு

மலைவாழ் மக்களின் குலதெய்வமும், அடியார்சாமி சித்தரும்

Published On 2025-08-23 15:24 IST   |   Update On 2025-08-23 15:24:00 IST
  • மலையின் நடுப்பகுதியில் அடியார்சாமி சித்தர் சன்னதி உள்ளது.
  • சிவன் குடிகொண்டு இருக்கும் மலையை சுற்றி சித்தர்கள் உலா வருவார்கள் என்று சொல்லப்படுவது உண்டு.

மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் மலைவாழ் மக்களின் குலதெய்வமாகவும் விளங்குகிறார். முன்னொரு காலத்தில் புதுப்பதி, சின்னாம்பதி, வெள்ளியங்கிரி போன்ற இடங்களில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வந்துள்ளனர். அவர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோவிலுக்கு வந்து சாமியை தரிசித்து விட்டு சென்றுள்ளனர்.

மேலும் படியேறும் வழியில் அடியார்சாமி என்ற சித்தர் சன்னதி உள்ளது. அந்த சன்னதியிலும் மலைவாழ் மக்கள் அதிகம் வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மலைவாழ் மக்கள் பல இடங்களுக்கு பிரிந்து சென்று வாழ்ந்து வந்தாலும் தற்போதும் இந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுகிறார்கள். சிலர் மொட்டையடித்து காணிக்கை செலுத்தி இங்கு வந்து வழிபடுவதை காண முடிகிறது.

மலையின் நடுப்பகுதியில் அடியார்சாமி சித்தர் சன்னதி உள்ளது. மலைக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. சிவன் குடிகொண்டு இருக்கும் மலையை சுற்றி சித்தர்கள் உலா வருவார்கள் என்று சொல்லப்படுவது உண்டு.

இந்தநிலையில் அடியார்சாமி சித்தர் சிலையுடன் சன்னதி இருப்பது விசேஷமானதாக கருதப்படுகிறது. இதனால் மலையேறும் பக்தர்கள் அடியார்சாமியை வழிபட்டு செல்கிறார்கள். அவருக்கும் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.

Tags:    

Similar News