புதுச்சேரி

நூதன பேனர் வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி.

இளைஞர் பெருமன்றத்தினர் நூதன பேனருடன் ஆர்ப்பாட்டம்

Published On 2023-08-24 08:12 GMT   |   Update On 2023-08-24 08:12 GMT
  • புதுவை அரசை கண்டித்து நூதன பேனர் வைத்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • மாநில குழு உறுப்பினர் சரவணன் தொகுதி குழு உறுப்பினர் ஜெயகுரு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

புதுச்சேரி:

நெல்லிதோப்பு தொகுதி இளைஞர் பெருமன்றம் சார்பில் இடிக்கப்பட்ட மீன் மார்க்கெட் கட்டிடத்தை கட்டி தராத புதுவை அரசை கண்டித்து நூதன பேனர் வைத்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

இளைஞர் மன்ற தொகுதி செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு தொகுதி தலைவர் கோபி, தொகுதி குழு உறுப்பினர்கள் சிவா, ரூவியர்,ஆனந்தகுமார், பாலா, பிரசாந்த் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு தொகுதி செயலாளர் சதீஷ் பெருமான்,

ம ாநில குழு உறுப்பினர் சரவணன் தொகுதி குழு உறுப்பினர் ஜெயகுரு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

Tags:    

Similar News