புதுச்சேரி

கோப்பு படம்.

சாராயக்கடையில் தகராறில் ஈடுபட்ட வாலிபர் கைது

Published On 2023-02-21 05:56 GMT   |   Update On 2023-02-21 05:56 GMT
  • நெட்டப்பாக்கம் சாராயக்கடையில் ஒரு வாலிபர் அதிக குடிபோதையில் அங்கு சாராயம் குடித்து கொண்டிருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டு ரகளை செய்வதாக நெட்டப்பாக்கம் போலீசாருக்கு தகவல் வந்தது.
  • உடனே போலீசார் அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

புதுச்சேரி:

நெட்டப்பாக்கம் சாராயக்கடையில் ஒரு வாலிபர் அதிக குடிபோதையில் அங்கு சாராயம் குடித்து கொண்டிருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டு ரகளை செய்வதாக நெட்டப்பாக்கம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரகளை செய்த வாலிபரை மடக்கி பிடிக்க முயன்றனர்.

அப்போது அந்த வாலிபர் போலீசாரை தள்ளிவிட்டு தப்பி செல்ல முயன்ற போது அங்குள்ள சால்னா கடையில் தடுப்புக்காக வைத்திருந்த இரும்பு தகரத்தில் மீது விழுந்தார்.

உடனே போலீசார் அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நெட்டப்பாக்கம் அருகே ஏரிப்பாக்கம் புதுகாலனியை சேர்ந்த சத்தியன்(வயது34) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சத்தியனை போலீசார் கைது செய்தனர்.

புதுவை புதிய பஸ் நிலையம் எதிரே ஒருவர் குடிபோதையில் நின்றுக்கொண்டு அவ்வழியே செல்லும் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளை செய்து கொண்டிருந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் அரக்கோணம் பகுதியை சேர்ந்த வடிவேல்(47) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வடிவேலை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News