புதுச்சேரி
பாலத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
- ரகு வேலை விஷயமாக லிங்காரெட்டிப்பாளையம் செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
- காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
விழுப்புரம் மாவட்டம் வானூர் ராமநாதபுரம் ரைஸ்மில் ரோட்டை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி பச்சையம்மாள்.
இவர் தனது தாய் அமலமேலு தம்பி ரகு (வயது42) ஆகியோருடன் வசித்து வருகிறார். வெல்டிங் தொழிலாளியான ரகுவிற்கு இன்னும் திருமணமாகவில்லை. ரகு வேலை விஷயமாக லிங்காரெட்டிப்பாளையம் செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
மது போதையில் அவர் பாலத்தில் நடந்து வந்தபோது தவறி விழுந்தார். இதனை கண்டவர்கள் அவரை மீட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரகு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.