புதுச்சேரி

கோப்பு படம்.

தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

Published On 2023-03-13 10:29 IST   |   Update On 2023-03-13 10:29:00 IST
  • புதுவை அருகே நெட்டப்பாக்கத்தில் மது குடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • இதையடுத்து மீண்டும் பிரச்சினை ஏற்படும் என்று நினைத்து மதியா வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

புதுச்சேரி:

நெட்டப்பாக்கத்தில் மது குடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நெட்டப்பாக்கம் அம்பேத் கர் நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் லோகநாதன் (வயது60). கூலி தொழிலாளி. இவருக்கு மதியா என்ற மனைவியும், 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

மகள் மற்றும் ஒரு மகனுக்கு திருமணமாகி விட்டது. மது குடிக்கும் பழக்கமுள்ள லோகநாதன் தினமும் தான் சம்பாதிக்கும் பணத்தை மது குடித்து செலவழித்து வந்தார். இதனால் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. ஆனாலும் லோகநாதன் மது பழக்கத்தை கைவிடவில்லை.

இந்த நிலையில் மது குடித்து விட்டு லோகநாதன் வீட்டுக்கு வந்தார். பின்னர் மீண்டும் மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டார். ஆனால், மதியா பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் மனைவியை லோகநாதன் திட்டினார். இதையடுத்து மீண்டும் பிரச்சினை ஏற்படும் என்று நினைத்து மதியா வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து மதியா வீட்டுக்கு வந்தார்.

அப்போது வீட்டின் குளியல் அறையில் இரும்பு பைப்பில் கணவர் சேலையால் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சிய டைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து கணவரை மீட்டு நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே லோக நாதன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது மனைவி மரியா கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News