புதுச்சேரி

கோப்பு படம்.

எலி மருந்து தின்று பெண் தற்கொலை

Published On 2022-12-06 08:26 GMT   |   Update On 2022-12-06 08:26 GMT
  • துவை பிள்ளைச்சாவடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகலிங்கம்.
  • ராகினி தனது மகன் மற்றும் மகளை மாமியாரிடம் ஒப்படைத்து விட்டு தனது பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார்.

புதுச்சேரி:

புதுவை பிள்ளைச்சாவடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகலிங்கம். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ராகினி (வயது40). இவருக்கும் வில்லியனூரை சேர்ந்த பெக்கோலன் என்பவருக்கும் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பெக்கோலன் இறந்து விட்டார். இதையடுத்து ராகினி தனது மகன் மற்றும் மகளை மாமியாரிடம் ஒப்படைத்து விட்டு தனது பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் ராகினி காக்கையன்தோப்பை சேர்ந்த ராஜசேகர் என்பவரிடம் பணம் கடன் கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை ராகினி திருப்பி கேட்ட போது ராஜசேகர் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனஉளைச்சல் அடைந்த ராகினி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து சம்பவத்தன்று எலி மருந்தை எடுத்து தின்று விட்டார். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட ராகினியை அவரது பெற்றோர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை ராகினி பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து அவரது தந்தை நாகலிங்கம் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News