புதுச்சேரி

நலத்திட்ட பணிகளை செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

பாகூர் தொகுதியில் நலத்திட்ட பணிகள்

Published On 2023-06-30 04:51 GMT   |   Update On 2023-06-30 04:51 GMT
  • செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
  • குருவிநத்தம் சித்தேரி அணைக்கட்டு கட்டுப்பாட்டு அறை வளாகத்தை சுற்றிலும் ரூ.15 லட்சத்து 49 ஆயிரத்து 675 செலவில் மதில் சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.

புதுச்சேரி:

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் மூ.புதுக்குப்பம் சுனாமிநகரில் தார்சாலை, குடிநீர் குழாய் அமைக்க ரூ.33 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பில் ஏற்பாடு செய்து அதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

இதில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆணையர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து பாகூர் துாக்குபாலம் முதல் வண்ணாங்குளம் சாலையை ரூ. 9 லட்சத்து 30 ஆயிரம் செலவில் தார்சாலை அமைக்கவும், குருவிநத்தம் இலுப்பை தோப்பு குடியிருப்பு பகுதியில் ரூ.5 லட்சத்து 10 ஆயிரத்து 400 செலவில் சிமெண்ட் சாலை அமைக்கவும், பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு சார்பில், குருவிநத்தம் சித்தேரி அணைக்கட்டு கட்டுப்பாட்டு அறை வளாகத்தை சுற்றிலும் ரூ.15 லட்சத்து 49 ஆயிரத்து 675 செலவில் மதில் சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.

இந்நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் முத்துசிவம், இளநிலை பொறியாளர்கள் பிரதிப்குமார், புனிதவதி, பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு உதவி பொறியாளர் ராஜன், இளநிலை பொறியாளர் ஜெயரமணன், தி.மு.க. தொகுதி செயலாளர் அரிக்கிருஷ்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News