புதுச்சேரி

போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குச் சான்றிதழ் வழங்கிய காட்சி.

தண்ணீர் திருவிழா-செந்தில்குமார் எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்

Published On 2023-03-05 04:30 GMT   |   Update On 2023-03-05 04:30 GMT
  • புதுவையின் அருகே பாகூரில் வட்டார அளவிலான தண்ணீர்த் திருவிழா நடைபெற்றது.
  • அறிவியல் இயக்கத்தின் பொறுப்பாளர் தட்சிணாமூர்த்தி பாராட்டி பேசினார். பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் நோக்கவுரை ஆற்றினார்.

புதுச்சேரி:

பாகூரில் வட்டார அளவிலான தண்ணீர்த் திருவிழா நடைபெற்றது.

புதுவை நலப்பணிச் சங்கத்தின் ஆலோசகர் முத்துஅய்யாசாமி வரவேற்றார். புதுவை நலப்பணிச் சங்கத்தின் தலைவரும் பாகூர் தண்ணீர்த் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் வெற்றிவேல் தலைமை தாங்கினார்.

நல்லாட்சிக்கான கூட்டமைப்பு பொறுப்பாளர் விக்டர் ராஜ் அறிமுக உரையாற்றினார். தண்ணீர் ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளர் பாவாடை கருத்துரை வழங்கினார்.

புதுவை அறிவியல் இயக்கத்தின் பொறுப்பாளர் தட்சிணாமூர்த்தி பாராட்டி பேசினார். பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் நோக்கவுரை ஆற்றினார்.

சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குச் சான்றிதழ் வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் சிலம்பப் பயிற்சியாளர் செல்வம், முதலுதவி பயிற்சியாளர் செஞ்சிலுவைச் சங்கத்தின் அருள், ஏரி சங்கத்தின் பொறுப்பாளர் அர்ச்சுனன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News