பொதுமக்களுக்கு நீர், மோர்-அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தொடங்கி வைத்தார்
- புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் பொதுமக்களுக்கு நீர் மோர், வெள்ளரிக்காய், இளநீர், தர்பூசணி, கிர்னிபழம் ஆகியவைகளை வழங்கினார்.
- இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அம்மா அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் பிரபாகரன் செய்திருந்தார்.
புதுச்சேரி:
புதுவை மாநில அம்மா அறக்கட்டளை சார்பில் உப்பளம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பிள்ளு கடை சந்திப்பு, துறைமுகம் மெயின் கேட், கல்லரை வீதி சந்திப்பு, அவ்வை நகர் அகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் பொதுமக்களுக்கு நீர் மோர், வெள்ளரிக்காய், இளநீர், தர்பூசணி, கிர்னிபழம் ஆகியவைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அம்மா அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் பிரபாகரன் செய்திருந்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில இணை செயலாளர் வீரம்மாள், மாநில துணை செயலாளர் காந்தி, புதுவை நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் செல்வம், இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ் வேந்தன், மாநில எம். ஜி.ஆர். மன்ற தலைவர் மோகன்தாஸ், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் சுரேஷ், மாநில அம்மா பேரவை துணை செயலாளர் வெங்கடேசன்,ஏம்பலம் தொகுதி செயலாளர் சம்பத் உப்பளம் தொகுதியை சேர்ந்த சவரிநாதன், சிவா, செல்வம், ரமேஷ், குணாளன், பாக்கியராஜ், ரெமோ, நாகராஜ், சங்கர், சரத், இஸ்மாயில், ரியாஸ் உட்பட பலர் உடனிருந்தனர்.