புதுச்சேரி

பெரிய மார்கெட் வியாபாரிகள் கருத்துகேட்பு கூட்டம் நடந்த போது எடுத்தபடம்.

கருத்துகேட்பு கூட்டம் நடத்திய காய்கறி வியாபாரிகள்

Published On 2023-06-12 14:11 IST   |   Update On 2023-06-12 14:11:00 IST
  • மார்க்கெட்டை இடமாற்றம் செய்தால் தொடர் போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளனர்.
  • இடமாற்றத்தை ஏற்கக்கூடாது என கருத்து தெரிவித்தனர்.

புதுச்சேரி:

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெரிய மார்க்கெட் புதுப்பிக்கப்பட உள்ளது. இதற்காக பெரியமார்க்கெட்டை தற்காலிகமாக ரோடியர் மில் திடலுக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அங்குள்ள வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மார்க்கெட்டை இடமாற்றம் செய்தால் தொடர் போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளனர்.

இதனிடையே காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் இன்று மார்க்கெட் இடமாற்றம் குறித்து வியாபாரிகளிடம் கருத்து கேட்டனர். இதில் காய்கறி வியாபாரிகள், பூ வியாபாரிகள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற பெரும்பாலான வியாபாரி கள், இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடன் பெற்று தொழில் செய்வதாகவும், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் தற்காலிக கடைகளில் பொருட்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்றும் தெரிவித்தனர்.

மேலும் அரசால் திட்ட மிட்டபடி குறித்த காலத்திற்குள் புதுப்பித்து தர முடியாது. ஏற்கனவே இடிக்கப்பட்ட நெல்லித்தோப்பு பணிகள் தொடங்கப்படவே இல்லை. அண்ணா திடல் பணி முடிவடையவில்லை.

எனவே வருடக்கணக்கில் தற்காலிக இடத்தில் மார்க்கெட் இருக்க வேண்டியதிருக்கும். எனவே இடமாற்றத்தை ஏற்கக்கூடாது என கருத்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News