புதுச்சேரி

கோப்பு படம்.

பாரதிதாசன் கல்லூரியில் வன மகோற்சவ விழா

Published On 2023-07-25 12:26 IST   |   Update On 2023-07-25 12:26:00 IST
  • மழைநீர் சேமிப்பு தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
  • கல்லூரி முதல்வர் ராஜிசுகுமார் முன்னிலை வகித்தார்.

புதுச்சேரி:

புதுவை பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் வன மகோற்சவ விழா கெண்டாடப்பட்டது. என்எஸ்எஸ், தாவரவியல்துறை, ஈகோ கிளப், நேருயுவகேந்திரா இணைந்து நடத்திய விழாவில் மாணவிகளுக்கு பேச்சு, ஓவியம், ரங்கோலி போட்டிகள் நடந்தது. மழைநீர் சேமிப்பு தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.

நேரு யுவகேந்திரா இணை இயக்குனர் தெய்வசிகாமணி வரவேற்றார். கல்லூரி முதல்வர் ராஜிசுகுமார் முன்னிலை வகித்தார்.

மாநில இயக்குனர் குன்ஹாமீது தலைமை வகித்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். மாநில என்எஸ்எஸ் திட்ட அதிகாரி சதீஷ்குமார், முன்னாள் வன காவலர் ராஜலு, விழுப்புரம் வன வரம்பு அதிகாரி தர்மலிங்கம், தாவரவியல்துறை தலைவர் வீரமோகன், பேராசிரியர் அலமேலுமங்கை, செயலாளர் ரஜினி வாழ்த்தி பேசினர். என்.எஸ்.எஸ் திட்ட அதிகாரி ஆரோக்கியமேரி நன்றி கூறினார்.

விழாவையொட்டி கல்லூரி வளாகத்தில் 20 மரக்கன்றுகள் நடப்பட்டது.

Tags:    

Similar News