புதுச்சேரி

விவேகானந்தர் கோச்சிங் சென்டரில் யூ.டி.சி. மாதிரி தேர்வு நடைபெற்ற போது எடுத்த படம்.

விவேகானந்தர் கோச்சிங் சென்டரில் யூ.டி.சி. மாதிரி தேர்வு

Published On 2023-07-21 14:21 IST   |   Update On 2023-07-21 14:21:00 IST
  • விவேகானந்தர் கோச்சிங் சென்டரில் திறமை வாய்ந்த வல்லுனர்களை வைத்து மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்து போட்டி தேர்வை நடத்தி வருகிறது.
  • ஏராளமான மாணவ-மாணவிகள் எழுதினர்

புதுச்சேரி:

புதுவை அரசு சார்பில் மேல்நிலை எழுத்தர் (யூ.டி.சி.) பணிக்கான தேர்வு நாளை மறுநாள்  நடைபெற உள்ளது.

இத்தேர்வில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் முதலியார் பேட்டையில் உள்ள விவேகானந்தா கோச்சிங் சென் டரில் இன்று யூ.டி.சி மாதிரி தேர்வு நடைபெற்றது.

இதனை விவேகானந்தர் கோச்சிங் சென்டர் உரிமையாளர் வி.சி.சி. நாகராஜன் தொடங்கி வைத்தார்.

இத்தேர்வில் ஏராளமான மாணவ-மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர். இது குறித்து விவேகானந்தர் கோச்சிங் சென்டர் உரிமையாளர் நாகராஜன் கூறியதாவது:-

பல ஆண்டுகளாக புதுவை அரசு நடத்தும் வேலை வாய்ப்பு பணிக்குவிவேகானந்தர் கோச்சிங் சென்டரில் திறமை வாய்ந்த வல்லுனர்களை வைத்து மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்து போட்டி தேர்வை நடத்தி வருகிறது.

எங்களது கோச்சிங் சென்டரில் படித்து பயிற்சி பெற்று தற்போது காவல் துறையில் போலீசார் முதல் உயர் அதிகாரி வரையும் மற்றும் எல்.டி.சி., யூ.டி.சி. தேர்வுகளில் அதிக அளவில் தேர்சி பெற்று அரசின் பல்வேறு துறைகளில் ஊழியர்களாகவும் அதிகாரிகளாகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.

தற்போது நாளை மறுநாள் நடைபெறும் யூ.டி.சி.தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் சேர உள்ள அனைத்து மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது புதுவை சென் டக் மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி உடனிருந்தார்.

விவேகானந்தர் கோச்சிங் சென்டரில் இதுவரை படித்து பயிற்சி பெற்றவர்கள் டி.இ.டி.,சி.டி.இ.டி. தேர்வில் 98 பேரும் 2012-ம் ஆண்டு நடந்த காவலர் தேர்வில் 48 பேரும் 2015-ம் ஆண்டு நடந்த காவலர் மற்றும் ஐ.ஆர்.பி.என். போலீஸ் தேர்வில் 88 பேரும் அதே ஆண்டில் நடந்த யூ.டி.சி. தேர்வில் 20 பேரும் 2022-ம் ஆண்டு நடந்த போலீஸ் தேர்வில் 78 பேரும் தேர்சி பெற்றனர்.

இதுவரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஊர் காவல் படை போட்டித்தேர்வில் விவேகானந்தர் கோச்சிங் சென்டர் மூலம் 672 பேர் தேர்ச்சி பெற்று அரசு வேலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விவேகானந்தர் கோச்சிங் சென்டர் 12 முறை சிறந்த கோச்சிங் சென் டருக்கான விருதை பெற்றுள்ளது.

Tags:    

Similar News