புதுச்சேரி

ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கிய காட்சி.

ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை

Published On 2022-10-05 09:51 GMT   |   Update On 2022-10-05 09:51 GMT
  • தி.மு.க. பொதுமக்கள் சேவை மையம் நிர்வாகி மதன் பாபு ஏற்பாட்டில் முத்தியால்பேட்டை சோலை நகரில் தி.மு.க. ஆட்டோ ஸ்டாண்டு அமைக்கப்பட்டுள்ளது.
  • விழாவில் தொகுதி செயலாளர் சவுரிராஜன்,முன்னாள் கவுன்சிலர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதுச்சேரி:

தி.மு.க. பொதுமக்கள் சேவை மையம் நிர்வாகி மதன் பாபு ஏற்பாட்டில் முத்தியால்பேட்டை சோலை நகரில் தி.மு.க. ஆட்டோ ஸ்டாண்டு அமைக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ ஸ்டாண்டு பெயர் பலகையை எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. திறந்து வைத்து, ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கினார்.

விழாவில் தொகுதி செயலாளர் சவுரிராஜன்,முன்னாள் கவுன்சிலர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமை செயற்குழு உறுப்பினர் தைரியநாதன், துணை அமைப்பாளர் அமுதா குமார், உருளையன்பேட்டை தொகுதி செயலாளர் சக்திவேல், தொழிற்சங்க தலைவர் அண்ணா அடைக்கலம், ஆட்டோ சங்கத் தலைவர் மெஷில், முன்னாள் கவுன்சிலர் தனசேகர், எழிலன், மணவெளி பொறுப்பாளர் சண்முகம், லாஸ்பேட்டை தொகுதி செயலாளர் ராஜா, கதிர்காமம் பொறுப்பாளர் வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News