புதுச்சேரி

அவசரநிலை சிகிச்சை குறித்த பயிற்சியை ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி டீன் ராகேஷ் சேகல் தொடங்கி வைத்து பேசினார்.

அவசரநிலை சிகிச்சை குறித்து பயிற்சி

Published On 2023-07-18 14:10 IST   |   Update On 2023-07-18 14:10:00 IST
  • மகப்பேறு நிகழ்வுகள் மற்றும் நச்சுத்தன்மை ஆகியவை 50% இறப்புகளுக்கு காரணமாகின்றன.
  • இந்த திட்டத்தில் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

புதுச்சேரி:

இந்தியாவில் தற்செயலான காயங்கள் அல்லது அதிர்ச்சி, இருதய, சுவாசம், மகப்பேறு நிகழ்வுகள் மற்றும் நச்சுத்தன்மை ஆகியவை 50% இறப்புகளுக்கு காரணமாகின்றன.

இதனை தவிர்க்க ஆரம்ப காலத்திலே ஏற்படும் பிரச்சினைகளை முறையாக கையால தேசிய மருத்துவ ஆணையம் பதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது.

அதன்படி அனைத்து இந்திய மருத்துவ பட்டதாரிக ளும் முதன்மை பராமரிப்பு மருத்துவர்களாகவும் முதலில் தொடர்பு கொள்ளும் மருத்துவர்க ளாகவும் பணியாற்ற அவசர மருத்துவ சிகிச்சையில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதற்கென மத்திய அரசு ஜீவ ரக்ஷா விரிவான அவசர சிகிச்சை மற்றும் வாழ்க்கை உதவி எனும் திட்டத்தை உருவாக்கப்பட்டது.

இந்த பயிற்சியானது பொதுவான அவசரகால பராமரிப்பு சூழ்நிலை அடிப் படையிலான அணுகு முறையை உள்ளடக்கியது. இப்பயிற்சியில் இருதய மற்றும் சுவாச அவசர நிலைகள், அதிர்ச்சி, தீக்கா யங்கள், விஷம், மகப்பேறு, குழந்தைகளுக்கான அவசரநிலைகள் மற்றும் பிறந்த குழந்தைகளின் உயிர்த்தெழுதல் ஆகிய வற்றைக் கையாள்கிறது. இந்த திட்டத்தில் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

இதற்கான பயிற்சி திட்டத்தை டீன் டாக்டர். ராகேஷ் சேகல் தலைமை தாங்கி தொடங்கிவைத்து, பங்கேற்பாளர்கள் சமூகத்திற்கு சேவை குறித்து பாராட்டி பேசினார். ஹெல்த் ப்ரொபெஷன்ஸ் எஜுகேஷன், டீன். டாக்டர் மகாலட்சுமி மற்றும் ஸ்கில்ஸ் லேப் டீம், டாக்டர் ராஜ்குமார் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பலர் ஏற்பாடு செய்தனர்

இதுகுறித்து ஹெல்த் ப்ரொபெஷன்ஸ் கல்வி மற்றும் ஜீவரக்ஷா திட்டத்தின் தலைமை அமைப்பாளரான டாக்டர் மகாலட்சுமி கூறியதாவது:-

புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரி, புதுச்சேரி ஜீவரக்ஷா அறக்கட்டளையுடன் 2022 டிசம்பரில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தப் பயிற்சியை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொடங்கும் முதல் மருத்து வக் கல்லூரி இதுவாகும். பயிற்சியாளர்கள் மற்றும் முதுகலை மாணவர்க ளுக்கான திட்டம். முதல் கட்டமாக, 4 நாட்கள் 32 வல்லுநர்களை கொண்டு பாட நெறிமுறைகளை கொண்டு பயிற்சி அளித்தனர்.

இதனை ஜீவரக்ஷா அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ராம் நாயர் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து 11 உதவியாளர்கள் குழு இந்த திட்டத்தை வழிநடத்துகிறது என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News