புதுச்சேரி

நேரு எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்ட காட்சி.

நலத்திட்ட பணிகளில் தொய்வு-நேரு எம்.எல்.ஏ. ஆய்வு

Published On 2023-04-04 08:12 GMT   |   Update On 2023-04-04 08:12 GMT
  • புதிய தண்ணீர் குழாய்கள் அமைக்கும் பணி, புதிய கழிவுநீர் தொட்டிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
  • இதையடுத்து தொகுதி எம்எல்ஏ நேரு அப்பகுதியில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சேரி:

புதுவை உருளை யன்பேட்டை தொகு திக்குட்பட்ட சின்ன வாய்க்கால் வீதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் வாய்க்கால் மேம்படுத்தும் பணி, புதிய மின் கேபிள்கள், புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணி, புதிய தண்ணீர் குழாய்கள் அமைக்கும் பணி, புதிய கழிவுநீர் தொட்டிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மிக மெதுவாக பணிகள் நடப்பதாக அப்பகுதி மக்கள் புகார் கூறினர். இதையடுத்து தொகுதி எம்எல்ஏ நேரு இன்று அப்பகுதியில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். பணிகள் ஏன் மிகவும் காலதாமதமாக நடக்கிறது என அதிகாரிகளிடம் எம்எல்ஏ கேட்டறிந்தார்.

ஆய்வின்போது பொதுப்ப ணித்துறை நீர்ப்பாசன பிரிவு உதவி பொறியாளர் சம்மந்தம், பொது சுகாதார குடிநீர் பிரிவு உதவி பொறியாளர் வாசு, கழிவுநீர் உட்பட்ட பிரிவு உதவி பொறியாளர் வைத்தியநாதன், மின்துறை உதவி பொறியாளர் கண்ணன், நகராட்சி உதவி பொறியாளர் நமச்சிவாயம், இளநிலை பொறியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தினர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News