புதுச்சேரி

கோப்பு படம்.

சென்டாக் அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு நீதிபதிகள் கண்டனம்

Published On 2023-10-02 13:45 IST   |   Update On 2023-10-02 13:45:00 IST
  • ரூ.10 லட்சம், சென்டாக் தரப்பில் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் 4 வாரத்தில் இத்தொகையை வழங்க வேண்டும்.
  • மனுதாரருக்கு இடம் வழங்க மறுக்கும் சந்தர்ப்பத்தை கல்வி நிறுவ னம் எதிர்பார்த்துள்ளது.

புதுச்சேரி:

புதுவையை சேர்ந்தவர் சித்தார்த்தன். மருத்துவ முதுநிலை படிப்புக்கு தனியார் மருத்துவ கல்லூரி யில் 2017-ல் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தது.

குறிப்பிட்ட கால அவகா சத்தில் அவர் கட்டணம் செலுத்தவில்லை. பணி உத்திரவாதம் அளிக்க வில்லை என சித்தார்த்தனுக்கு சேர்க்கை மறுக்கப்பட்டது.

இதை எதிர்த்து ஐகோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதிகள் சுப்பிரமணியன், கலைமதி கொண்ட அமர்வு விசாரித்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணாமல், புதுவை சுகாதாரத்துறையும், சென்டாக் எனப்படும் மத்திய சேர்க்கை குழுவும் பொறுப்பற்ற முறையில் நடந்துள்ளன.

மனுதாரருக்கு இடம் வழங்க மறுக்கும் சந்தர்ப்பத்தை கல்வி நிறுவ னம் எதிர்பார்த்துள்ளது. அப்போதுதான் கூடுதல் கட்டணம் பெற்று அந்த இடத்தை வேறொருவருக்கு வழங்க முடியும்.

மருத்துவ கல்லூரியின் நடவடிக்கை கண்டிக்கத் தக்கது. மருத்துவ படிப்பில் சேர்க்கை மறுத்த தற்கு கல்லூரி நிர்வகமும், சென்டாக் அதிகாரிகளும் தான் காரணம். மனுதாரர் அதிர்ஷ்டவ சமாக மறு ஆண்டில் மற்றொரு கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டார். இருப்பினும் இழப்பீடு பெற உரிமை உள்ளது. எனவே ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

கல்லூரி தரப்பில் ரூ.10 லட்சம், சென்டாக் தரப்பில் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் 4 வாரத்தில் இத்தொகையை வழங்க வேண்டும்.

சமூகத்துக்கு சேவை செய்வதாக கூறி மனசாட்சி இன்றி தனி நபர்களும், நிறுவனங்களும் கல்வியை வணிக மயமாக்கி விட்டன. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறு வதை தடுக்க தேசிய மருத்துவ மையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News