புதுச்சேரி
மதுக்கடையை எரித்து விடுவதாக மிரட்டல்
- காலாவதியான மது பாட்டில்களை விற்பதாக கூறி தகராறு செய்தார்.
- பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் அடுத்த கன்னியகோயில் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வினோத்குமார். வயது (33). இவர் பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் மதுக்கடையில் கேஷியராக வேலை செய்து வருகிறார்.
நேற்று இவர் பணியில் இருந்த போது குருவிநத்தம், பெரியார் நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (எ) ஜெகன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் கடைக்கு வந்து மதுபானங்கள் வாங்கினர். அதில் ஒன்றில் காலாவதியான மது பாட்டில் இருந்ததாக கூறி மணிகண்டன் தகராறு செய்தார். பின்னர் ஒரு கட்டத்தில் கடையை மூட முயற்சித்தார்.
இதனை தடுத்த வசந்தகுமாரை கையால் தாக்கி கடையை இழுத்து மூடி கொளுத்தி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.