புதுச்சேரி

திருக்கல்யாணம் நடைபெற்ற காட்சி.

ஹயக்ரீவர் கோவிலில் திருக்கல்யாணம்

Published On 2022-09-10 11:00 IST   |   Update On 2022-09-10 11:00:00 IST
  • முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோவிலில் 51-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 30-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
  • நாள்தோறும் லஷ்மி ஹயக்ரீவர் பல்வேறு வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

புதுச்சேரி:

முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோவிலில் 51-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 30-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து லட்சுமி ஹயக்ரீவருக்கு கிருஷ்ண ஹாயத்ரி ஹோமம், ஹயக்ரீவ ஹோமம், சக்தி ஹோமம், ராம காயத்ரி ஹோமம், உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் கடந்த 9 நாட்களாக நடைபெற்றது. நாள்தோறும் லஷ்மி ஹயக்ரீவர் பல்வேறு வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 11-ம் நாள் விழாவை முன்னிட்டு லட்சுமி ஹயக்ரீவருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

Tags:    

Similar News