புதுச்சேரி

குருமாம்பேட் சுப்பிரமணிய சாமி கோவிலில் நடந்த திருக்கல்யாண வைபவத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த காட்சி.

பாலசுப்பிரமணியர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்-முதல்-அமைச்சர் ரங்கசாமி பங்கேற்பு

Published On 2023-04-06 10:26 IST   |   Update On 2023-04-06 10:26:00 IST
  • முதல்-அமைச்சர் ரங்கசாமி, குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணகுமார் ஆகியோர் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்டனர்.
  • 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தனர்.

புதுச்சேரி:

ஊசுடு தொகுதி குருமாம்பேட் பகுதியில் எழுந்தருளியுள்ள புற்று மாரியம்மன் கோவில் மற்றும் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண விழா விமர்சையாக நடைபெற்றது.

இதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணகுமார் ஆகியோர் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்டனர்.

பிரத்தியேகமாக உரு வாக்கப்பட்ட இடத்தில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஊசுடு தொகுதி பா.ஜனதா தலைவர் சாய்.தியாகராஜன், ஊசுடு தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள், கோவில் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News