கோப்பு படம்.
- புதுவை அருகே முத்தியால்பேட்டையில் சுமை தூக்கும் தொழிலாளி மயங்கி விழுந்து இறந்து போனார்.
- உறவினர்கள் அறிவுரை கூறியதின் பேரில் கடந்த ஒரு வாரமாக மணிவண்ணன் மது பழக்கத்தை நிறுத்தி விட்டார்.
புதுச்சேரி:
சுமை தூக்கும் தொழிலாளி மயங்கி விழுந்து இறந்து போனார். புதுவை முத்தியால் பேட்டை திருவள்ளுவர் நகர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணியரசு. இவரது இளைய மகன் மணிவண்ணன் (வயது36).
திருமணம் ஆகாத இவர் அரும்பார்த்தபுரம் தக்ககுட்டை வி.ஐ.பி. நகர் பின்புறத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி கடந்த 6 மாதமாக பிருந்தாவனம் பகுதியில் சுமை தூக்கும் வேலை செய்து வந்தார்.
இதற்கிடையே மணிவண்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. உறவினர்கள் அறிவுரை கூறியதின் பேரில் கடந்த ஒரு வாரமாக மணிவண்ணன் மது பழக்கத்தை நிறுத்தி விட்டார். இதனால் அவருக்கு சிறிது உடல்நிலை பாதிப்பு இருந்தது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை மணிவண்ணனுக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி சரிந்தார். உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு ஆட்டோ மூலம் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியி லேயே மணிவண்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது தந்தை மணியரசு கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.