புதுச்சேரி
போலீஸ் நிலையத்தில் மதில்சுவர் அமைக்கும் பணி
- பொதுப்பணி துறையின் அரசு நிதி மூலம் ரூ.42 லட்சத்து 22 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
- சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
பாகூர் போலீஸ் நிலையம் வளாகத்தை சுற்றி 300 மீட்டரில் புதிதாக மதில் சுவர் கட்டுவதற்காக பொதுப்பணி துறையின் அரசு நிதி மூலம் ரூ.42 லட்சத்து 22 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை செயற்பொ றியாளர் வல்லவன், உதவி பொறியாளர் ரவீந்திரன், இளநிலை பொறியாளர் ஏகாம்பரம், பாகூர் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.