புதுச்சேரி

முப்பெரும் விழா திருச்சி தமிழ் சங்கத்தில் நடைபெற்ற காட்சி.

உலக பாவலர் தமிழன்னை தமிழ் பேரவை முப்பெரும் விழா

Published On 2023-08-03 14:53 IST   |   Update On 2023-08-03 14:53:00 IST
  • திருச்சி மண்டல தமிழறிஞர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா திருச்சி தமிழ் சங்கத்தில் நடைபெற்றது.
  • மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

புதுச்சேரி:

உலக பாவலர் தமிழன்னை தமிழ் பேரவை எனும் பன்னாட்டு அமைப்பின் ஆண்டு விழா கலைஞர் நூற்றாண்டு விழா மற் றும் திருச்சி மண்டல தமிழறிஞர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா திருச்சி தமிழ் சங்கத்தில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி கம்பன் கழக செயலாளரும், முன்னா ள் சபாநாயகருமான சிவக் கொழுந்து, முன்னாள் தமிழக எம்.பி. டி.கே .எஸ். இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

புதுவை தமிழ்ச்சங்க செயலாளர் சீனு மோகன்தாஸ், பேராசிரியர் செயலாபதி, அமைப்பின் நிறுவனர் அனந்தசயனம் ஆகியோர் பேசினார்கள். அமைப்பின் கொள்கைகளை செயலாளர் அருள்செல்வம் விளக்கினார். விழாவில் தமிழறிஞர்களுக்கு விருது, முன்னாள் மத்திய மந்திரி வேங்கடபதிக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது.

மேலும் கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முடிவில் இளங்கோவன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News