புதுச்சேரி
குடிசை மாற்று வாரிய ஊழியர்கள் உண்ணாவிரதம்
- புதுவை குடிசைமாற்று வாரிய அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் முல்லை நகர் அலுவலகத்தின் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
- மாதந்தோறும் சம்பளம் வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை குடிசைமாற்று வாரிய அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் முல்லை நகர் அலுவலகத்தின் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு சங்க ஆலோசகர் பிரேமதாசன், தலைவர் பழனிநாதன் தலைமை வகித்தனர். துணைத்தலைவர்கள் கணேசன், பழனி, வீரமுத்து, செயலாளர் கோவிந்தராசு முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். மாதந்தோறும் சம்பளம் வழங்க வேண்டும். வாரியத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி
இந்த போராட்டம் நடந்தது.