விளையாட்டு கவுன்சிலை மீண்டும் செயல்படுத்த வேண்டும்
- புதுவை அரசு தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு சங்கங்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
- விளையாட்டு சங்கங்களின் எதிர்ப்புகளை மீறி பதிவு செய்து அதன் முதலாவது கூட்டத்தை கடந்த 14-ந் தேதி கூட்டியது.
புதுச்சேரி:
புதுச்சேரி மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு சங்கங்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
புதிதாக ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அத்தாரிட்டி ஆப் புதுச்சேரி என்ற ஒரு அமைப்பை சட்ட விதிகளுக்கு புறம்பாக பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்களின் எதிர்ப்புகளை மீறி பதிவு செய்து அதன் முதலாவது கூட்டத்தை கடந்த 14-ந் தேதி கூட்டியது.
அதில் விளையாட்டு சங்கங்களுக்கும் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கும் தேவையான உருப்படியான எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை, அனைத்து விளையாட்டு சங்கங்களின் முதுகெலும்பான புதுவை மாநில விளையாட்டு கவுன்சிலை மூடுவதற்கான நடவடிக்கைகளை மட்டும் எடுத்துள்ளனர்.
பல ஆண்டுகளாக விளையாட்டு கவுன்சிலில் பல்வேறு முறைகேடுகள் நடை பெற்றுள்ளன. முறையான கணக்கு வழக்குகள் பல ஆண்டுகளாக தாக்கல் செய்யப்பட வில்லை. இவற்றை யெல்லாம் மூடி மறைப்பதற்கா கவே இந்த புதிய அமைப்பு கூட்டம் நடைபெற்று ள்ளது.
எனவே புதுவை அரசு இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து மாநில விளையாட்டு வளர்ச்சி அடைய முயற்சி செய்ய வேண்டும். மேலும் புதுவை மாநில விளையாட்டு கவுன்சில், ராஜீவ்காந்தி விளையாட்டு பயிற்சி பள்ளி, அமுதசுரபி, பாப்ஸ்கோ, பாசிக், பஞ்சாலைகள், சர்க்கரை ஆலைகள், மின்சார துறை, அரசு மருத்துவ கல்லூரி ஆகியவற்றை தொடர்ந்து அரசு நடத்த ஆக்கபூர்வமான நடவடிக்கையை முதல்-அமைச்சர் ரங்கசாமி எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.