- சேதராப்பட்டு திருச்சிற்றம்பலம் கூட்ரோடு செல்லும் சாலை ஓரத்தில் தனியார் கட்டிடத்தின் எதிரே பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
- அந்தப் பகுதியில் டீ வியாபாரம் செய்து வரும் இளைஞர் ஒருவர் அடிக்கடி வந்து இந்த கடையில் பிரச்சினை செய்து வந்ததும்.
புதுச்சேரி:
சேதராப்பட்டு அருகே உள்ள அச்சரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது 50). இவரது மனைவி ஜெயந்தி. இவர்கள் சேதராப்பட்டு திருச்சிற்றம்பலம் கூட்ரோடு செல்லும் சாலை ஓரத்தில் தனியார் கட்டிடத்தின் எதிரே பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
வழக்கம்போல் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு சென்ற இவர்கள் காலை மீண்டும் கடையை திறக்க வந்த போது கடை முழுவதும் எரிந்து சாம்பலாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து வானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்தப் பகுதியில் டீ வியாபாரம் செய்து வரும் இளைஞர் ஒருவர் அடிக்கடி வந்து இந்த கடையில் பிரச்சினை செய்து வந்ததும். இரவு அந்த வாலிபர் சேகர் மற்றும் ஜெயந்தியிடம் தகாத வார்த்தைகள் பேசி தகராறில் ஈடுபட்டதும் இதன் காரணமாக பழக்கடைக்கு அவர் தீவைத்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
ஏற்கனவே சேகர் அதே ரோட்டில் பழக்கடை நடத்தி வந்த போது அந்த கடையை சில மாதங்களுக்கு முன்பு இதே போல் நள்ளிரவில் மர்ம நபர்கள் எரித்து சேதப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.