கோப்பு படம்.
தச்சு தொழிலாளி மயங்கி விழுந்து சாவு
- நோய் காரணமாக முருகன் கடந்த ஒரு வருட மாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறர்கள்.
புதுச்சேரி:
வீராம்பட்டினம் யோக லட்சுமி நகரை சேர்ந்தவர் முருகன்(வயது54). இவர் தச்சு தொழில் செய்து வந்தார். இவரது மனைவி அலமேலு. இவர் மீன் வியா பாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. மேலும் அவருக்கு அடிக்கடி வலிப்பு நோய்யும் ஏற்படும். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நோய் காரணமாக முருகன் கடந்த ஒரு வருட மாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் முருகன் வீட்டில் சாப்பிட்டு விட்டு கடற்கரைக்கு சென்று வருவதாக கூறிச் சென்றார். இந்த நிலையில் அங்குள்ள சவுக்கு தோப்பில் முருகன் இறந்து கிடப்பதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் வந்தது.
உடனே குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு முருகன் வலிப்பு நோய் ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து முருகனின் மனைவி அலமேலு கொடுத்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறர்கள்.