புதுச்சேரி
தேசிய கொடியின் மூவர்ணத்தில் கோவில் பிரசாதம்- பக்தர்களுக்கு வினியோகம்
- அரசு மற்றும் தனியார் நிகழ்வுகளுடன் வழிபாட்டு தலங்களிலும் இந்த முறை சுதந்திர தின விழா களைகட்டியது.
- லாஸ்பேட்டை சிவசுப்ரமணியன் கோவிலில் 110 அடி உயரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
புதுச்சேரி:
நாட்டின் 76-வது சுதந்திர தின விழா புதுவையில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
அரசு மற்றும் தனியார் நிகழ்வுகளுடன் வழிபாட்டு தலங்களிலும் இந்த முறை சுதந்திர தின விழா களைகட்டியது.
அனைத்து கோவில்களிலும் கொடி ஏற்ற வேண்டும் என்று அரசின் இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டிருந்தது.
இதன்படி லாஸ்பேட்டை சிவசுப்ரமணியன் கோவிலில் 110 அடி உயரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதமாக தேசிய கொடி நிறத்தில் பிரசாதங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
இது பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.