புதுச்சேரி

கோப்பு படம்.

விஷபூச்சி கடித்ததில் ஆசிரியையின் கணவர் பலி

Published On 2023-06-06 05:31 GMT   |   Update On 2023-06-06 05:31 GMT
  • நெட்டப்பாக்கம் அருகே நடந்த சோக சம்பவம்.
  • ஜெயராமனுக்கு இன்சூலின் ஊசியை அவரது தம்பி சண்முகம் செலுத்துவது வழக்கம்.

புதுச்சேரி:

புதுவை நெட்டப்பாக்கம் அருகே மடுகரை சேடர் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன்(வயது56). இவரது மனைவி சிவகாமி. இவர் லாஸ்பேட்டை ஜெ.டி.எஸ். அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து மகன்களுடன் லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் வசித்து வருகிறார்.

ஜெயராமன் பிளாஸ்டிக் பை வியாபாரம் செய்து கொண்டு தனது தம்பி சண்முகம் அரவணைப்பில் இருந்து வந்தார்.

ஜெயராமனுக்கு நீரழிவு நோய் இருந்து வந்தது. இதற்காக அவர் தினமும் இன்சூலின் ஊசியை பயன்படுத்தி வந்தார். ஜெயராமனுக்கு இன்சூலின் ஊசியை அவரது தம்பி சண்முகம் செலுத்துவது வழக்கம்.

அதுபோல் சண்முகம் இன்சூலின் ஊசியை செலுத்த ஜெய ராமனின் வீட்டுக்கு சென்றார்.

அப்போது ஜெயராமன் வாயில் நுரை தள்ளியப்படி கையில் ரத்தம் கசிந்தவாறு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். ஜெயராமனை ஏதோ விஷப்பூச்சி கடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மூத்த மகன் சுகந்தன் கொடுத்த புகாரின் பேரில் மடுகரை புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News