புதுச்சேரி

கருத்தை வன்முறையால் எதிர்கொள்ளக்கூடாது: கவர்னர் தமிழிசை

Published On 2023-10-26 13:30 IST   |   Update On 2023-10-26 13:30:00 IST
  • சாமானிய மக்கள்கூட டாக்டராகும் வாய்ப்பை நீட் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
  • நீட் தேவை என்பதே என் கருத்து.

புதுச்சேரி:

புதுவை கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

கவர்னர் ஒரு கருத்து கூறினால் ஆளும் கட்சியினர் எந்தளவு மோசமாக எதிர்கொள்கிறார்கள். இப்படி வன்முறையில் ஈடுபட்டால் ஆள்பவர்களின் ஆதரவு கிடைக்கும் என நினைக்கும் அளவு தமிழகத்தில் பேச்சு நிலவுகிறது. கருத்தை கருத்தால் எதிர்கொள்ளலாம்.

கருத்தை வார்த்தை கலவரத்தாலும், வன்முறை கலவரத்தாலும் எதிர்கொள்ளும் சூழ்நிலை எந்த மாநிலத்திலும் இருக்கக் கூடாது, தமிழகத்திலும் இருக்கக்கூடாது.

கவர்னர் கருத்துக்கு எதிர்கருத்து கூறும்போது ஏன் வன்மையான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள்? சாமானிய மக்கள்கூட டாக்டராகும் வாய்ப்பை நீட் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இது சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு. நீட் தேவை என்பதே என் கருத்து.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து அருகில் இருந்த முதலமைச்சர் ரங்கசாமியிடம், மருத்துவ கலந்தாய்வில் குழப்பம், புதிய அமைச்சர் நியமனம் குறித்து கேட்டபோது உங்களை அழைத்து பேசுகிறேன் என கூறி சென்றார்.

Tags:    

Similar News