புதுச்சேரி

வேட்பு மனு தாக்கல் செய்ய 10 ரூபாய் நாணயங்கள் மூட்டையுடன் வந்த மதுக்கடை ஊழியர்

Published On 2024-03-25 06:45 GMT   |   Update On 2024-03-25 06:45 GMT
  • புதுச்சேரி தொகுதியில் இதுவரை அரசியல் கட்சியினர் யாரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை.
  • ராமதாஸ் முள்ளோடையில் உள்ள தனியார் மதுபாரில் சப்ளையராக வேலை செய்து வருகிறார்.

புதுச்சேரி:

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையான சான்றிதழ்களை பெறவும், நல்லநேரம் பார்த்து வருகின்றனர்.

புதுச்சேரி தொகுதியில் இதுவரை அரசியல் கட்சியினர் யாரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. கிராமப் பகுதிகளில் தேர்தல் சம்மந்தமான எந்த அறிகுறியும் இல்லாமல் உள்ளது.

இந்நிலையில் 2 முறை சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட கிருமாம்பாக்கம் பனங்காட்டு தெருவை சேர்ந்த ராமதாஸ் (வயது 59). 10 ரூபாய் நாணயங்கள் அடங்கிய மூட்டையுடன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய மாவட்ட கலெக்டர் அலுவலத்துக்கு வந்தார்.

ராமதாஸ் முள்ளோடையில் உள்ள தனியார் மதுபாரில் சப்ளையராக வேலை செய்து வருகிறார்.

ஏற்கனவே கடந்த 2014 மற்றும் 2019-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டார். இதே போன்று சட்டசபை தேர்தல்களிலும் 3 முறை போட்டியிட்டு உள்ளார்.

10 ரூபாய் நாணயம் செல்லாது என்று பலர் கூறி வருகின்றனர். சில கடைகளில் வாங்கவும் மறுக்கின்றனர். அரசு விநியோகித்த இந்த 10 ரூபாய் நாணயத்தை அரசாங்கத்திடமே ஒப்படைக்க போகிறேன் என்று அவர் கூறி உள்ளார்.

இந்த நாணயங்களை அவர் கடந்த 5 ஆண்டுகளாக சேமித்து வைத்துள்ளார்.

Tags:    

Similar News