புதுச்சேரி

கோப்பு படம்.

அனைத்து போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா

Published On 2023-06-26 08:33 GMT   |   Update On 2023-06-26 08:33 GMT
  • வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தல்
  • சில போலீஸ் நிலையங்கள் வாடகை கட்டிடங்களில் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

புதுச்சேரி:

மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகன்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை, காரைக்கால், ஏனாம் மற்றும் மாகி ஆகிய 4 பிராந்தியத்திலும் சட்டம் ஒழுங்கை போலீஸ் நிலை யங்கள் கட்டுப்படுத்துகிறது. இந்த போலீஸ் நிலையங்க ளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மிக, மிக குறைவாக உள்ளது. சில போலீஸ் நிலையங்களில் கட்டணம் செலுத்தாததால் தொலைபேசி நீண்டகாலம் இயங்கவில்லை. சில போலீஸ் நிலையங்கள் வாடகை கட்டிடங்களில் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

மக்கள் தொகைக்கேற்ப போலீஸ் நிலையங்கள் கூடுதலாக்கப்படாமல் உள்ளது. பெருகி வரும் குற்றச்செயல்கள் தடுக்கப்பட்டு, மக்கள் பாது காப்பு நடவடிக்கை விரைவுபடுத்திட கூடுதல் போலீஸ் நிலையங்கள் அமைத்திட வேண்டும். அனைத்து போலீஸ் நிலை யங்களிலும் வெளிப்படைத் தன்மையுடன் மக்கள் பாது காப்பை உறுதிபடுத்தவும், குற்றச் செயல்களை தடுத்திடவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், எல்லையோர போலீஸ் ரோந்து பணிகளை முடுக்கி விட வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News