புதுச்சேரி

கோப்பு படம்.

குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Published On 2023-06-25 11:16 IST   |   Update On 2023-06-25 11:16:00 IST
  • கிருஷ்ணாநகர் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி
  • குடிநீர் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

புதுச்சேரி:

புதுச்சேரி அரசு பொது சுகாதார கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி குடிநீர் உட்கோட்ட வடக்கு பிரிவுக்குட்பட்ட கிருஷ்ணாநகர் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

இதையொட்டி மதியம் 12 மணி முதல் 2 மணி வரை கிருஷ்ணாநகர் முழுவதும், சூரியகாந்தி நகர், வசந்த நகர், செந்தாமரைநகர், தேவகிநகர், சங்கரதாஸ் சுவாமிகள்நகர், எழில்நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News