மன்னர் மன்னன் உருவபடத்துக்கு சபாநாயகர்- அமைச்சர் மற்றும் மலர் அஞ்சலி செலுத்திய காட்சி.
மன்னர் மன்னன் உருவபடத்துக்கு சபாநாயகர்- அமைச்சர்கள் மலர் அஞ்சலி
- மன்னர் மன்னன் 3-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வாக அலங்கரித்து வைக்கப்பட்ட அவரின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி
- முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளி நிர்வாகி கராத்தே சுந்தரராஜன் வாழ்த்திப் பேசினார்.
புதுச்சேரி:
பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் மாதந்தோறும் பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா புதுச்சேரி பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வருகிறது.
புரட்சிக்கவிஞரும் புகழ் மைந்தரும் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாத விழாவில் முதுபெரும் தமிழறிஞர் மன்னர் மன்னன் 3-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வாக அலங்கரித்து வைக்கப்பட்ட அவரின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் அமைச்சர்கள் நமச்சிவாயம், சந்திரப்பிரியங்கா, துணைசபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், பிரகாஷ்குமார், வி.பி.ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. இளங்கோ, கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் கலியபெருமாள், அறக்கட்டளச் செயலர் வள்ளி,தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து, கம்பன் கழகத் துணைத்தலைவர் ஜனார்த்தனன், திருக்குறள் மன்றத் தலைவர் சுந்தர லட்சுமிநாராயணன், ரெவேய் சொசியால் சங்கத் தலைவர் துபாய் குழந்தை, பாவலர் பயிற்சிப்பட்டறை மன்றத் தலைவர் இலக்கியன், தமிழ்மாமணி ஆதிகேசவன், துரைமாலிறையன், கல்லாடன், மதாம்திரு, தன்னுரிமைக் கழகம் சடகோபன், டாக்டர் வனஜா வைத்தியநாதன், வரலாற்றுச் சங்கத் தலைவர் ராசசெல்வம், தமிழறிஞர்கள் கோவிந்தராசு, ஆறு செல்வன், ரமேஷ்பைரவி, விதிருவளவன், கிருஷ்ணகுமார், இளங்கோவன், புதுவைக்குமார், மீனாட்சிதேவி கணேஷ், து.சசிகுமார் உட்பட எழுத்தாளர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மலரஞ்சலி செய்தனர்.
இதனை தொடந்து மன்னர்மன்னன் கவிதை வரியான "அறிவாற்றல் வளர்த்திடுவோம்!" என்ற தலைப்பில் மாணவர்களுக்கு கவிதைப் போட்டி நடத்தப்பட்டது.
இதில் 140 மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு மன்னர் மன்னன் மகனும் அறக்கட்டளைத் தலைவருமான கோ.பாரதி தலைமை தாங்கினார்.
முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளி நிர்வாகி கராத்தே சுந்தரராஜன் வாழ்த்திப் பேசினார்.
இதில் உசேன், அசோகா சுப்பிரமணியன், சீனு.வேணுகோபால், அவ்வை நிர்மலா, கிருஷ்ணமூர்த்தி, விஜயலட்சுமி, செல்வதுரை நீஸ், சரசுவதி வைத்திய நாதன், ராஜஸ்ரீமகேஷ் , வெற்றிவேந்தன், ராஜி ராமன் ஜெயலட்சுமிசங்கர், தமிழரசன், பிரமீளாமேரி கலந்து கொண்டு பேசினர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அறக்கட்டளை சார்பில் ரொக்கப் பரிசு வழங்க ப்பட்டது.