புதுச்சேரி

புதிய பாலத்தை சிவா எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்த காட்சி.

ரூ.10 லட்சத்தில் சிறிய பாலம்-சிவா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

Published On 2022-08-01 09:52 IST   |   Update On 2022-08-01 09:52:00 IST
  • வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிருந்தாவனம், விரிவாக்கம் பகுதியில் நீர்பாசன வாய்க்கால் மீது பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டாக கோரிக்கை வைத்து வந்தனர்.
  • மழை காலத்தில் மிக கடுமையாக அவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ. சிவாவிடம் புகார் தெரிவித்தனர்.

புதுச்சேரி:

வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிருந்தாவனம், விரிவாக்கம் பகுதியில் நீர்பாசன வாய்க்கால் மீது பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டாக கோரிக்கை வைத்து வந்தனர்.

மழை காலத்தில் மிக கடுமையாக அவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ. சிவாவிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பொதுப்பணித்துறை நீர்பாசனக் கோட்டம் மூலம் ரூ.10 லட்சத்தில் பாலம் கட்டுமான பணியை கடந்த பிப்ரவரியில் சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். 6 மாதத்தில் இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த புதிய பாலத்தின் திறப்பு விழா நடந்தது. எதிர்கட்சி த்தலைவர் சிவா, பிருந்தாவனம் நகர் மக்கள் முன்னிலையில் பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப் பணித்தார்.

நிகழ்ச்சியில், குடியிருப்போர் நல்வாழ்வுச் சங்க நிர்வாகிகள் பிரகாஷ், ரகுராமன், சிவாஜிராவ், செல்வகணபதி, சங்கர் சீனுவாசன், வெ ங்கடகோவிந்தன், மூர்த்தி, அன்பழகன், லதா, சுகந்தி, ஆஷா, சுஜா, புவனா, அன்பழகி, தி.மு.க. நிர்வாகிகள் செல்வநாதன், மணிகண்டன், ச பரிநாதன், ரமணன், திலகர், பாபு, செல்வம், ஏழுமலை, தங்கராசு, சர்வன், சிலம்பு, ஷர்மா, பாபு, நவணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News